இந்திய அணியை காப்பாற்றிய அஸ்வின்: வங்காளதேசத்திற்கு சரியான பதிலடி!

வங்காள தேசத்துடனான இந்தியாவின் ஆட்டம் சிறப்பாக அமைந்திருக்கிறது.

Update: 2022-12-16 03:36 GMT

வங்காள அணியுடன் முதல் டெஸ்ட் போட்டி சரிவில் இந்திய அணிக்கு பிறகு வரும் நாட்களில் சிறப்பான ஆட்டத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் தற்பொழுது அஸ்வின் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்த ஒரு போட்டியை மிகவும் சுவாரசியமாக மாற்றியிருக்கிறார். குறிப்பாக இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் சட்டோகிராம் மைதானத்தில் தொடங்கியது.


இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்த களமிறங்கி இந்திய அணியில் டாப் ஆர்டர் மோசமான பேட்டிங் காரணமாக சொதப்பலை சந்தித்தது. இந்தியா ஓபனிங் வீரரான ராகுல் 22 ரன்கள் 20 நாட்களுக்கும் ஆட்டம் இழந்து அவுட் ஆனார். நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய விராட் கோலிக்கு அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். எனவே இந்திய அணி 43 என்று நிலையில் தடுமாறியது. அதன் பின்னர் வந்த பூஜரா 90 ரண்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களும் அடித்து இந்தியா அணியை காப்பாற்றினார்கள்.


எனினும் இந்திய அணி ஒரு வலுவான இடத்திற்கு செல்லவில்லை. முதல் நாள் முடிவில் இந்தியா 278 ரன்கள் ஆடி வந்தது. இதனால் 300 ரன்கள் ஆவது வந்துவிடுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் தான் நான் இருக்கிறேன் என்று அஸ்வின் தற்போது கெத்து காட்டி இருக்கிறார். எட்டாவது வீரராக களமிறங்கிய அவர் மிகவும் நேர்த்தியானால் இந்தியாவை சரிவிலிருந்து மீட்டார். எந்த இடத்திலும் பவுலர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் 13 அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News