இந்தியா அணியில் இடம்பெற இருக்கிறார்களா தமிழக வீரர்கள்? யார் அவர்கள்?

இந்திய அணியில் தமிழக வீரர்கள் இரண்டு பேர் இடம் பெற இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Update: 2023-02-06 01:01 GMT

இந்திய அணி தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது ஆனால் இந்திய அணியில் இரண்டு முக்கிய வீரர்கள் காயம் காரணமாக தற்பொழுது வெளியேறி இருக்கிறார்கள். அதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் சுழற் பந்துவீச்சை சமாளிக்க பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்கள். குறிப்பாக அஸ்வினின் ஜெராக்ஸ் வீரர் சுழற்சிக்கு சாதகமாக ஆடுகளம் என ஆஸ்திரேலிய வீரர் தற்பொழுது தேர்வுக்கு தயாராவது போல் மிகவும் கடுமையாக பயிற்சிகளை எடுத்து வருகிறார்கள்.


எனவே இந்தியாவின் ஆடுகளம் குறித்து தேவையான தகவல்களை பேட்ஸ்மேன்களுடன் ஆலோசனை கூட்டத்தை ஆஸ்திரேலியா நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக இந்திய அணியும் வலுப்படுத்த முயற்சிகள் இந்திய அணி அதிரடியாக திட்டங்களை நடத்த உள்ளார்கள். குறிப்பாக ஒரு வாரத்திற்கு முன்பாகவே நாக்பூரில் இந்திய பயிற்சி வீரர்கள் பயிற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் கூடுதலாக 6 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் இதில் இரண்டு தமிழக வீரர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், மாயங் மார்க்கண்டே, சௌரப் குமார் பில்கிட் நாரங்கல் ஆகிய 6 வீரர்களும் இந்திய வீரர்களுக்கு பயிற்சி செய்ய உதவுவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக BCCI தெரிவித்துள்ளது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் என்பதால், வாசிங்டன் சுந்தர் மட்டும் மெயின் அணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News