சர்வதேச டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி பட்டம்!

Update: 2022-01-09 11:05 GMT

ஏடிபி டென்னிஸ் போட்டியில் முதன் முறையாக இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஜோடி இணைந்து விளையாடினர்.

அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய இரட்டையர்கள் முதல் நிலை வீரரான குரேஷியாவின் இவான் டோடிக் மற்றும் பிரேசிலின் மார்செலோ மெலோ ஜோடியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் 7-6 (6) 6-1 என்ற கணக்கில் போபண்ணா ராம்குமார் ராமநாதன் ஜோடி வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.

Source: Maalaimalar

Image Courtesy:IndiaTv

Tags:    

Similar News