இந்திய அணிக்கு எதிரான வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் - வெற்றியின் மகிழ்ச்சியில் கேப்டன் பின்ச்.!
இந்திய அணிக்கு எதிரான வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் - வெற்றியின் மகிழ்ச்சியில் கேப்டன் பின்ச்.!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர்,
இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. போட்டி முடிந்த பிறகு வெற்றிக்களிப்பில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில்,
“நீண்ட நாட்களுக்கு பிறகு 50 ஓவர் போட்டிகளில் விளையாடும் பொழுது எனது ஆட்டத்தில் சற்று தடுமாற்றம் தெரிந்தது. ஆனால் எந்தவித தயக்கமும் இன்றி டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடினார். நல்ல துவக்கமாக வைப்பதற்கு உதவினார். நான் துவக்கத்தில் சற்று தடுமாறிய போது அவர் நிலைத்து ஆடியது எனக்கு பக்கபலமாக இருந்தது. மேலும் இரண்டு முறை நான் ஆட்டமிழக்க நிகழ்ந்தபோது எனக்கு கிடைத்த அதிசயம் உதவியது. அதனால் என்னால் சதம் விளாச முடிந்தது.
அதேபோல மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்த பொழுது மேக்ஸ்வெல் சிக்ஸர்களை விளாசி அணியை மீண்டும் ரன் குவிப்பில் எடுத்துச் சென்றபோது ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியதாக நான் உணர்கிறேன். நீண்ட இடைவெளிக்குப்பிறகு ரசிகர்கள் மத்தியில் விளையாடியது நல்ல உணர்வாகவும் அமைந்தது.
ஒட்டுமொத்தமாக அணியில் அனைவரும் நன்றாக செயல்பட்டனர் என்பது என்றே கூற வேண்டும். நல்ல ஆட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக நான் இதைப் பார்க்கிறேன். இந்திய அணி செய்த தவறை நாங்கள் சரி செய்து கொண்டதால் எங்களால் நன்றாக ஆட முடிந்திருக்கிறது. இன்று தோல்வியை தழுவியதால் அவர்கள் ஒன்றும் எளிதான அணி அல்ல.” என கூறினார்.