ஐஎஸ்எல் தொடரில் முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்த சென்னை அணி.!

ஐஎஸ்எல் தொடரில் முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்த சென்னை அணி.!

Update: 2020-11-25 16:44 GMT


கோவாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் தொடரின் நேற்றய போட்டியில் சென்னையின் எஃசி மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இந்த போட்டி தான் இந்த ஐஎஸ்எல் தொடரில் சென்னை அணிக்கு முதல் போட்டி ஆகும். இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி 2-1 என்ற கணக்கில் ஜாம் ஷெட்பூரை வீழத்தி முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. 


இந்த போட்டியின் முதல் நிமிடத்திலேயே சென்னை அணியின் அனிருத் தாபா  சென்னை அணிக்காக முதல் போல் அடித்தார். இதுவே இந்த சீசனில் முதல் இந்திய வீரர் அடித்த கோல் ஆகும். அதுவும் போட்டியின் 52 வது வீனாடியிலேயே முதல் கோல் அடித்ததன் மூலம் ஐஎஸ்எல் வரலாற்றில் குறைந்த நேரத்தில் அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையும் படைத்தது சென்னையின் எஃசி அணி. 


அதன் பின்னர் ஆட்டத்தின் 26 நிமிடத்தில் மீண்டும் இரண்டாவது கோல் சென்னை அணியால் அடிக்கப்பட்டது. பின்னர் போட்டியின் முதல் பாதி முடிவதற்குல் ஜாம்ஷெட்பூர் ஒரு கோல் போட முதல் பாதியில் 2-1 என்ற நிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் போடாத நிலையில் சென்னை அணி 2-1 என்ற நிலையில் வெற்றி பெற்றது. 

Similar News