இன்றைய போட்டியில் சென்னை அணியில் பிராவோவிற்கு பதிலாக விளையாட போவது யார்.!

இன்றைய போட்டியில் சென்னை அணியில் பிராவோவிற்கு பதிலாக விளையாட போவது யார்.!

Update: 2020-10-19 14:05 GMT

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. சென்னை அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் உள்ளது. அதே போல் ராஜஸ்தான் அணியும் விளையாட உள்ள ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் ஓன்பது போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளன. இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் சற்று ஆறுதல் கிடைக்குமே தவிர அவர்கள் வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியது கட்டயம்.

இந்நிலையில் இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியில் முக்கிய வீரர் விளையாட வாய்ப்பு இல்லை என கூறப்படுகின்றது. ஆம் சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ இந்த போட்டியில் காயம் காரணமாக விளையாட வாய்ப்பு குறைவு என கூறப்படுகின்றது. அதே நேரம் பிராவோவிற்கு பதிலாக யாரை சென்னை அணி களம் இறக்கப்போகின்றது என ரசிகர்களிடையே கேள்வி ஏழுந்துள்ள நிலையில் வெளிநாட்டு வீரர்களில் லுங்கி இங்கிடி அல்லது இம்ரான் தாஹிர் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.

சென்னை அணியில் ஏற்கனவே இரண்டு லெக் ஸ்பின்னர் இருப்பதால் இம்ரான் தாஹிர் களம் இறங்குவாரா அல்லது வேகப்பந்தூ வீச்சுகே செல்ல வாய்ப்பு உள்ளது என சென்னை அணி குழப்பத்தில் உள்ளது. ஆனால் இந்த போட்டியில் சென்னை அணி முக்கியமான மாற்றங்களுடன் களம் இறங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி வெல்ல வேண்டியது கட்டயம்.

Similar News