சென்னையின் ஆல் ரவுண்டர் பிராவோ ஐபிஎல் தொடரில் கருந்து விலகல்.!

சென்னையின் ஆல் ரவுண்டர் பிராவோ ஐபிஎல் தொடரில் கருந்து விலகல்.!

Update: 2020-10-22 13:44 GMT

ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் டுவைன் ப்ராவோ விலகியுள்ளார். ஐபிஎல் தொடர் 13வது சீசனில் சென்னை அணி மிகபெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த போன்று தொடர் தோல்விகளில் இருந்தது இல்லை. சென்னை அணிக்கு மற்றொரு பெரிய இழப்பாக ப்ராவோ தொடரில் இருந்து விலகியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா தொற்றிற்கு நடுவில் நடைபெறுதால் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்த திட்டமிட்டது முதல் சென்னை அணிக்கு பெரிய சிக்கல்கள் வந்த வண்ணம் இருந்தன. முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று பின்னர் சென்னை அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தொடரில் இருந்து விலகல் மற்றும் ஹர்பஜன் சிங் தொடரில் இருந்து விலகல் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ந்து சிக்கல்கள் ஏழுந்துவந்தது.

இந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்து தொடரில் பங்கேற்ற சென்னை அணி முதல் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியை வீழ்த்தியது. இது ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கையை தந்த நிலையில் பின்னர் தொடர்ந்து ஹாட்-ரிக் தோல்வியை அடைந்து பெரிய அதிர்ச்சி அளித்தது. அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளிலும் தோல்வி நிலையை தொடர்ந்து வரும் நிலையில் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறுவது மிகவும் கடினம் என்ற சூழ்நிலையில் தற்பொழுது பிராவோவும் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆனால் சென்னை அணி நீர்வாகம் இதுவரை மூன்று முக்கிய வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் ஒரு வீரருக்கு கூட மாற்று வீரரை அறிவிக்காமல் உள்ளது.

Similar News