கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ருத்ராஜ் பற்றி தோனி கருத்து.!

கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ருத்ராஜ் பற்றி தோனி கருத்து.!

Update: 2020-10-30 18:50 GMT

ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும் கில் 26 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொதப்பினர். 

பின்னர் விளையாடிய சென்னை அணியில் வாட்சன் இந்த போட்டியில் களம் இறக்கப்பட்ட நிலையில் மோசான ஆட்டத்தை வெளிபடுத்தி அவுட் ஆக மற்றொரு தொடக்க வீரர் ருத்ராஜ் கெக்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி சென்னை அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து இரண்டு போட்டிகள் அரைசதம் விளாசிய கெக்வாட் 72 ரன்கள் அடித்தார். பின்னர் வந்த ராய்டு அதிரடியாக விளையாட சென்னை அணி வெற்றி நோக்கி சென்ற நிலையில் ராய்டு தோனி அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க சென்னை அணி தடுமாறியது. கடைசி ஓவரில் ஜடேஜா அதிரடி காட்ட சென்னை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இந்நிலையில் போட்டி முடிந்து ருதுராஜின் சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய தோனி கூறுகையில் : கோவிட் பாதிப்பிற்கு பிறகு திரும்பி வந்த கெய்க்வாட் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த தொடரின் இளம் வீரர்களில் இவரும் ஒரு நல்ல திறமையுள்ள வீரராக வலம் வருகிறார். ஒரு பேட்ஸ்மேனாக அவர்கள் விளையாடும்போது சூழ்நிலைகளை அறிந்து சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் போட்டியில் ஆரம்பம் முதலே அடிக்கவேண்டும் என்று நினைத்து அவர் ஆட்டமிழந்து சென்றார்.

ஏனெனில் அது அடிக்க வேண்டிய தருணம் அதனால் அந்த ஒரு பந்து அவருக்கு போதாது என நினைத்தேன். அதன்பிறகு அவருக்கு வாய்ப்புகளை கொடுத்தோம். அதன்படி அவரும் சிறப்பாக விளையாடி தனது வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இந்த தொடரில் இவரது சேர்க்கை மிக முக்கியமானது என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் இனிவரும் போட்டிகளிலும் அவரின் இடம் உறுதியாகியுள்ளது.

Similar News