ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக வாட்சன் அறிவிப்பு.!

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக வாட்சன் அறிவிப்பு.!

Update: 2020-11-02 22:38 GMT

ஐபிஎல் தொடர் மற்றும் அனைத்து வீதமான கிரிக்கெட் தொடரில் இருந்தும் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆம். ஷேன் வாட்சன் இனிமேல் சென்னை அணிக்காக விளையாடமாட்டார். இது சென்னை அணி வீரர்களுக்கு மிகபெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

முதல் ஐபிஎல் சீசனில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஷேன் வாட்சன் முதல் சீசனில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடி வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடைசெய்யப்பட்ட போது பெங்களுரு அணிக்காக விளையாடினார். 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் பெங்களுரு அணிக்காக விளையாடிய நிலையில் பெங்களுரு அணியில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைகாத நிலையே இருந்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு சென்னை அணிகாக தேர்வு செய்யப்பட்ட வாட்சன் அந்த சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி சென்னை அணிக்கு வெற்றிகளை பெற்று தந்தார்.

சென்னை அணிக்காக அற்பதாமான ஆட்டத்தை வெளிபடுத்தி உள்ளார் வாட்சன். நீண்ட காலம் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருந்தாலும் சென்னை அணியை மிகவும் பிடித்த அணி என கூறியுள்ளார் வாட்சன். இந்நிலையில் இந்த சீசனில் சென்னை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வெளியேறிய நிலையில் வாட்சன் ஓய்வை அறிவித்துள்ளார்.

Similar News