பேட்மிண்டன் வீரர் சாய்னா நெய்வாலுக்கு கொரோனா.!

பேட்மிண்டன் வீரர் சாய்னா நெய்வாலுக்கு கொரோனா.!

Update: 2021-01-12 14:28 GMT

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தற்போது தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருவதால் சற்று வைரஸ் குறைந்து காணப்படுகிறது.

அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று விளையாட்டு வீரர்கள், மற்றும் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரையும் தாக்கியது. இதில பல பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது மிகவும் வேதனையான விஷயமாகும்.

இந்நிலையில், பிரபல பேட்மிண்டன் வீரர்களான சாய்னா நெய்வால் மற்றும் பிரதாப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தாய்லாந்து ஓப்பன் தொடரில் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இருவரும் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News