சென்னை வந்தடைந்த இந்திய வீரர்களின் கொரோனா பறிசோதனை முடிவு வெளியீடு!

சென்னை வந்தடைந்த இந்திய வீரர்களின் கொரோனா பறிசோதனை முடிவு வெளியீடு!

Update: 2021-01-30 06:30 GMT

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை முதல் கட்டமாக நடத்தப்பட்டது இதன் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்துவிட்டது நிலையில் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது இதற்காக வீரர்கள் இந்திய வந்தடைந்துவிட்டனர். அதேபோல் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வந்த வீரர்கள் தற்போது தனிமைப்படுத்துதலில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.வீரர்களுக்கு மொத்தம் மூன்று கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. இவை அனைத்தும் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு முன்னர் முடிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் வீரர்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவர் எனவும் அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டிருக்கிறது.இந்நிலையில் முதல்கட்ட கொரோனா பரிசோதனையில் வீரர்கள் யாருக்கும் தோற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. வீரர்கள் அனைவரும் தொடர்ந்து விதிமுறைகளின்படி கண்காணிப்பில் இருக்கின்றனர். 

Similar News