கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு.. என்ன காரணம்.!

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு.. என்ன காரணம்.!

Update: 2020-12-22 16:53 GMT

மும்பையில் உள்ள ட்ராகன் ஃபிளை கிளப்பில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டதையடுத்து கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை விமான நிலையம் அருகே உள்ள ட்ராகன் பிளை கிளப்பில் சுரேஷ் ரெய்னா திங்கட்கிழமை இரவு கேளிக்கை விருந்தில் கலந்து கொண்டார். இதில் கொரோனா விதிமுறைகளை யாரும் கடைபிடிக்காமல் இருந்துள்ளனர். இதனையடுத்து அதிரடி சோதனை மேற்கொண்ட மும்பை போலீசார் 7 ஊழியர்கள் உட்பட சுரேஷ் ரெய்னா மற்றும் 34 பேரை கைது செய்தனர். பிறகு ரெய்னா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சுரேஷ் ரெய்னா, பாடகர் குரு ரந்தவா ஆகியோர் விதிமுறைகளை மீறியதற்கான சட்டப்பிரிவு 188-ன் கீழ் கைது செய்யப்பட்டு வழக்கில் சிக்கியுள்ளார். ட்ராகன் பிளை கிளப் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் மீறி திறந்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News