CSK நிர்வாகம் வெளியிட்ட தகவல் - தோனி ரசிகர்கள் உற்சாகம்!

CSK நிர்வாகம் வெளியிட்ட தகவல் காரணமாக தோனி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளார்கள்.

Update: 2022-09-05 00:11 GMT

எம்.எஸ்.தோனி அவர்களைப் பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் என்று அழைக்கப்படும் சிஎஸ்கே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக தோனி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளார்கள். ஏன் என்றால், வர இருக்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு யார் தலைமை பொறுப்பை வகிப்பார்? அணியின் கேப்டனாக யார் விளங்குவார்? என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்து வந்தது. இதற்கு விடை அளிக்கும் விதமாக தற்போது CSK நிர்வாகம் பதிலை அளித்துள்ளது.


கடந்த ஆண்டில் ஐபிஎல் போட்டியில் ஜடேஜாவின் கேப்டன்சி பதவியில் இருந்து, தோனிக்கு கேப்டன் பதவி மாற்றப்பட்டது. ஆனால் சி.எஸ்.கே அணி பிளே ஆஃப் கூட முன்னேறாமல் போட்டியிலிருந்து வெளியேறியது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு சி.எஸ்.கேவின் ஐபிஎல் தொடரில் எம்.எஸ் தோனி விளையாடுவாரா? என்பதை கேள்விக்குறியாக இருந்து வந்தது. இதற்கு பதில் இருக்கும் விதமாக தோனி நிச்சயம் 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல்லில் CSK உடையில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.


ஆனால் எந்த பதவியில் இருப்பேன் என்பதை தோனி அவர்கள் சொல்ல மறுத்துவிட்டார். இதனால் ஆலோசகராக தோனி செயல்படுவாரா? என்றும் தற்போது எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் தோனி அவர்களின் இந்த ஐ.பி.எல் அப்டேட் நமக்கு கிடைத்துள்ளது. இதை எடுத்து சமூக வலைதள பக்கங்களில் தோனியின் ரசிகர்கள் உற்சாகத்துடன் இந்த செய்திகளை பகிர்ந்து பார்க்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News