4வது முறையாக கோப்பையை வென்று அசத்திய சி.எஸ்.கே!

நடப்பு ஐபிஎல் 20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதன் மூலம் தற்போது 4வது முறையாக ஐபிஎல் சாம்பியனை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-10-16 01:57 GMT

நடப்பு ஐபிஎல் 20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதன் மூலம் தற்போது 4வது முறையாக ஐபிஎல் சாம்பியனை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்திருந்தனர். இருந்த போதிலும் அவர்களை தொடர்ந்து வந்தவர்கள் ரன் சேர்க்காமல் விட்டுவிட்டனர். அதோடு தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துவிட்டனர்.

20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. இதில் ஜடேஜா, ஹேசல்வுட், பிராவோ, தீபக் சாஹர் உள்ளிட்டோர் சென்னை அணியில் பவுலர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணி தற்போது 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது அந்த அணி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தோனிக்கு புகழாராம் சூட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Twiter


Tags:    

Similar News