மீண்டும் வருவாரா ஜடேஜா? சென்னை கேப்டன் தோனி எதிர்பார்ப்பு!

ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியில் தொடர்ந்து நீடிப்பாரா ஜடேஜா?

Update: 2022-11-06 08:26 GMT

இந்தியன் ப்ரீமியர் லீக் ஐ.பி,எல் 16வது சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளத. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி பெங்களூரில் நடக்கும் பொழுது, இதற்கு முன்பு வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் வீரர்களின் இறுதி போட்டிகளை சமர்ப்பிக்க வேண்டும். சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட உள்ளார்.


கடந்த சீசனில் அவரது தலைமையில் களமிறங்கிய சென்னை அணி மோசமான செயல்பாடுகளை வெளிப் படுத்தியது. இதனால் கேப்டன் பதவியில் இருந்து பாதியில் விலகி இவர் இடுப்பு பகுதி காயத்தினால் தொடரில் இருந்து பாதியில் வெளியேறினார். சென்னை அணி நிர்வாகத்துடன் நீண்ட நாட்களாக இவர் தொடர்பில் இல்லை. சமீபத்தில் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜடேஜா டி20 உலக கோப்பை தொடரிலிருந்து விலகினால், இவர் சென்னை அணியில் நீடிப்பாரா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு இருந்தது.


ஜடேஜாவுக்கு பதிலாக டில்லி அணியின் அக்ஸர் ஒப்பந்தம் செய்ய சென்னை அணி முயற்சி பதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும் கேப்டன் தோனிக்கு மிகவும் பிடித்தமானவர் ஜடேஜா. இவரது திறமை மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார். ஜடேஜாவின் இடத்தை வேறு யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்பதை அறிந்து கொண்டு வைத்துள்ளார். அடுத்த தொடரில் சென்னை அணிக்காக ஜடேஜா களம் இறக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஐ.பி.எல் அரங்கில் சென்னை அணிக்காக ரவீந்திர ஜடேஜா இதுவரை 142 போட்டிகளில் விளையாடு, பேட்டிங்கில் 1440 ரன் எடுத்துள்ளார், பௌலிங் 105 விக்கெட் சாய்த்து உள்ளார்.

Input & Image courtesy:Dinamalar News

Tags:    

Similar News