தோனிக்கு நடந்த ஆப்ரேஷன்.. வெற்றிகரமாக முடிந்ததாக டாக்டர்கள் தகவல்!

கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி அவர்களுக்கு நடந்த ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது.

Update: 2023-06-03 02:35 GMT

இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் மற்றும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் இன் கேப்டன் தோனி அவர்கள் கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது IPL கோப்பையை வென்றிருக்கிறது. ஏற்கனவே இந்த ஆட்டத்தின் போது கேப்டன் தோனி அவர்களுக்கு காலில் காயம் இருந்தது, அந்த காயத்துடன் தான் அவர் ஐபிஎல் விளையாட்டு வந்தார். போட்டி முடிந்த பிறகு தற்பொழுது அவருக்கு ஆபரேஷன் நடத்தப்பட்டு இருக்கிறது.


ஐபிஎல் போட்டி முடிந்ததும் நேராக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற தோனி அவர்கள் பிரபல எலும்பு டாக்டர் குழுமத்தை அணுகி காயத்தின் தன்மை குறித்து முழுமையாக பரிசோதித்துக் கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு அதை ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் நேற்று நடைபெற்றது. இந்திய இளம் கிரிக்கெட் ரிஷப் அவருக்கும் இதே மருத்துவமனையில் தான் முழங்கால் சிகிச்சைக்கு ஆபரேஷன் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


டோனி இப்போது நன்றாக இருக்கிறார். ஒரு சில நாட்களில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அதன் பிறகு தன்னை ஓய்வில் ஈடுபடுத்திக் கொள்வார். மேலும் அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்கான உடல் தகுதி அவருக்கு பெறுவதற்கு போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News