இந்த IPL உடன் விடை பெறுகிறாரா தோனி... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்... முடிவு என்ன?

இந்தியா ஐபிஎல் தொடருடன் சி.எஸ்.கே அணியில் இருந்த டோனி விடை பெற்று கொள்கிறாரா.?

Update: 2023-05-15 02:08 GMT

ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாட உள்ளது. சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இரண்டு அணிகளும் தங்களுக்குள் எதிர்கொள்ள இருக்கின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இந்த ஒரு போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது டோனியின் அபாரமான பேட்டிங்கை பார்த்து ரசித்த ரசிகர்கள் தற்பொழுது இதிலும் அவர் நிச்சயம் அசத்துவார் என்று ஒரு நோக்கத்தில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


சில நாட்களுக்கு முன் டாஸின் போது டேனி மாரிஸன் தோனியிடம், கடைசி ஐபிஎல் சீசனை எவ்வாறு கொண்டாடி வருகிறீர்கள்? என்று எழுப்பிய கேள்விக்கு, கடைசி ஐபிஎல் சீசன் என்று நீங்கள் தான் சொல்லி வருகிறீர்கள். நான் இதுவரை கடைசி சீசன் என்று சொல்லவில்லை என்று கூறி ஆச்சரியம் அளித்தார். எனவே இது தோனி அவர்களின் கடைசி ஆட்டம் கிடையாது என்று ரசிகர்கள் மத்தியில் சில நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்பொழுது மீண்டும் அதே கேள்வி எழுந்திருக்கிறது.


ஆனால் கடந்த காலங்களில் தோனி தனது ஓய்வு அறிவிப்பை எந்தவித பரபரப்பும் இல்லாமலேயே வெளியிட்டு வந்துள்ளார். ஏற்கனவே கிரிக்கெட்டின் டெஸ்ட் தொடர்களின் போது சாதாரண ஒரு கடிதம் மூலமாக ஒருநாள் போட்டிகளில் இருந்து தன் விளக்குவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வு பற்றி அறிவித்தார் தோனி அவர்கள். அதுபோல் சென்னையில் ஆடவுள்ள கடைசி லீக் போட்டியுடன் ஓய்வு அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News