நான்காவது டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்த இரண்டு தமிழக வீரர்கள் யார் யார் தெரியுமா.!

நான்காவது டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்த இரண்டு தமிழக வீரர்கள் யார் யார் தெரியுமா.!

Update: 2021-01-15 08:53 GMT

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பென் மைதானத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலேட் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் அஸ்வின் மற்றும் விஹாரியின் ஆட்டத்தின் முடிவில் டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
இந்த போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. அனுபவ வீரர்கள் யாரும் இந்த போட்டியில் இடம்பெறவில்லை. பும்ரா, ஜடேஜா, அஸ்வின், விஹாரி ஆகிய நான்கு வீரர்கள் இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில் தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாகூர் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். பேட்டிங்கில் இந்திய அணி வலுவான அணியாக இருந்தாலும் பந்து வீச்சில் சற்று தடுமாறும் நிலையே உள்ளது. 

Similar News