இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா?

Update: 2022-07-17 01:23 GMT

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நாளை நடைபெறுகிறது.

ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. புர்மாவின் அபார பந்து வீச்சும், ரோகித்சர்மாவின் அதிரடியான பேட்டிங்காலும் எளிதான முறையில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மேலும், இரண்டாவது போட்டியில் இந்திய வீரர்கள் ஆட்டம் மிகவும் ஏமாற்றம் அளிக்கின்ற வகையில் இருந்தது. 247 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 146 ரன் வித்தியாசத்தில் சுருண்டு 100 ரன்னில் மோசமான தோல்வியை சந்தித்தது.

அதன்படி இதில் இருந்து மீண்டு இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்ற ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. மேலும் முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்தார். இதனால் அவர் மிகுந்த நெருக்கடியில் இருக்கின்றார். தற்போது மிக, மிக முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடுவது அவசிமாகும். தற்போது நாளை நடைபெற உள்ள ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News