'எழுதி வையுங்க' இந்திய அணியின் ஆக்ரோஷ ஆட்டத்தை பார்ப்பீர்கள்: கேப்டன் ராகுல் உறுதி!

"எழுதி வேணா வைத்துக் கொள்ளுங்கள் இந்திய அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை களத்தில் பார்ப்பீர்கள்" என்று கேப்டன் உறுதி.

Update: 2022-12-14 03:33 GMT

வங்காள பிரதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முழு ஆக்ரோஷமும் தற்போது வெளிப்படும் என்று கேப்டன் ராகுல் தெரிவித்து இருக்கிறார. குறிப்பாக வங்காளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இன்றைய அணி மூன்று ஒரு நாள் போட்டிகளில் கலந்து கொண்டது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியை தழுவி வந்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா, பூம்ரா, ஜடேஜா ஆகியோர் இல்லாமல் இந்திய அணி விளையாட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


வங்காளத்திற்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் கேப்டனாக ராகுலும் மற்றும் துணை கேப்டனாக புஜாராவும் செயல்பட உள்ளனர். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற இந்திய அணி விளையாட ஆறு போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்த ஒரு சூழ்நிலையில் கேப்டன ராகுல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மீது எங்களின் கவனம் இருக்கிறது.


அதனால் இறுதிப்போட்டி முன்னேறுவதற்கு களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறோம் புள்ளி பட்டியலில் இந்திய அணி எங்கு இருக்கிறது? இறுதி போட்டிக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும்? என்பது நன்றாக தெரிந்து இருக்கிறது. எனவே இனிவரும் ஆட்டத்தில் ஆக்ரோஷமாக இந்திய அணியின் செயல்பாடுகளை நீங்கள் பார்ப்பீர்கள் என்றும் கூறுகிறார். டெஸ்ட் போட்டி நடக்க உள்ள மைதானத்தின் தன்மையை கவனித்து வருகிறோம். ரசிகர்கள் அனைவரும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை பார்க்க போகிறார்கள் என்று தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News