ரோகித் சர்மா பிறந்தநாளில் வெளி வந்த உருக்கமான தகவல்.. இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாரா?

இந்திய கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய வளர்ச்சி கால கட்டங்களில் பல்வேறு கஷ்டங்களை பட்டியிருக்கிறார்.

Update: 2023-05-01 01:15 GMT

ரோகித் சர்மா மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? குறிப்பாக அவரை நாம் இன்று அடையாளம் காணுவது இந்திய கிரிக்கெட் டீம் இன் கேப்டன் என்று தான். ஆனால் இவர் தன்னுடைய சிறு வயதில் பல்வேறு கஷ்டங்களை பட்டியிருக்கிறார். குறிப்பாக இவர் மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர். இவர் தன்னுடைய பாட்டி வீட்டில் தான் வளர்ந்து இருக்கிறார். இவர் சிறு வயதில் பால் பாக்கெட், பேப்பர் போடுதல் போன்ற பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். இவரை தற்போது இருக்கும் நிலைக்கு கொண்டு வந்தது கிரிக்கெட் மட்டும் தான் கிரிக்கெட்.


இவருடைய கனவு மட்டும் இல்லாது தன்னுடைய வாழ்க்கையாக இவர் விளையாடியிருக்கிறார். கிரிக்கெட்டில் தன்னுடைய திறமைகளை நிரூபித்து தற்போது இந்திய கிரிக்கெட் டீம்யின் கேப்டன் என்ற பொறுப்பை வகிக்கிறார். விராட் கோலிக்கு முன்பை இவர் இந்திய கிரிக்கெட் டீமில் வந்து இருக்கிறார். குறிப்பாக 2007 ஆம் ஆண்டு இந்தியா டி20 தொடரில் கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமாக காரணங்களில் இவருடைய ஆட்டம் இருந்திருக்கிறது.


தன்னுடைய 36 வது வயதில் அடி எடுத்து வைக்கும் ரோகித் சர்மா அவர்களுக்கு பல்வேறு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. திறமை இருந்தாலும் , தூக்கி விட ஒரு கை வேண்டும் அல்லவா. ரோகித்தின் முழு திறமையை அறிந்த தோனி, அவரை தொடக்க வீரராக விளையாட வைத்தார். அதன் பிறகு ரோகித்ஷர்மா இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு வெற்றி வாகைகளை சூடி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News