இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சரண்ஜித் சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

Update: 2022-01-28 02:41 GMT

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சரண்ஜித் சிங் தனது மகனுடன் இமாசலபிரதேச மாநிலத்தில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஜனவரி 27) காலை அவரது உயிர் பிரிந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி சரண்ஜித் சிங் மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 'பிரபல ஆக்கி வீரர் சரண்ஜித் சிங்கின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இந்திய ஆக்கி அணியின் வெற்றிகளுக்காக அதிகமான பங்களிப்பை அளித்தவர். அதிலும் ரோம் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி என குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: Dailyindia.net

Tags:    

Similar News