ஐ.பி.எல்: ஐதராபாத் வீரருக்கு கொரோனா வைரஸ்! திட்டமிட்டப்படி போட்டி நடைபெறுமா?

ஐபிஎல் தொடரில் விளையாடும் ஐதராபாத் அணிவீரர் நடராஜனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-22 11:21 GMT

ஐபிஎல் தொடரில் விளையாடும் ஐதராபாத் அணிவீரர் நடராஜனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் விளையாடும் வீரர் நடராஜனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உட்பட 5 வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி அணியுடன் இன்று விளையாட இருந்த நிலையில் வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதனை மறுத்த ஐபிஎல் நிர்வாகம் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என கூறியுள்ளது. ரசிகர்களும் ஆவலுடன் போட்டியை காண எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: DT Next


Tags:    

Similar News