நான் நிற பாகுபாட்டிற்கு ஆளாகியுள்ளேன்: முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன்!

நான் வாழ்நாளில் விமர்சனங்களுக்கும், நிற பாகுபாட்டிற்கும் ஆளாகியுள்ளேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2021-11-29 07:02 GMT

நான் வாழ்நாளில் விமர்சனங்களுக்கும், நிற பாகுபாட்டிற்கும் ஆளாகியுள்ளேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னாள் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் 9 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 26 விக்கெட்டுகளையும், 16 ஒருநாள் போட்டியில் விளையாடி 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 1983ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லட்சுமண் சிவராமகிருஷ்ணன் வௌயிட்டுள்ள ட்விட்டர் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News