இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டி: ஸ்டேடியத்தில் குவிந்த ரசிகர்களால் பரபரப்பு!

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடைசி ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் வாங்குவதற்காக குவிந்த ரசிகர்கள்.

Update: 2023-03-20 02:08 GMT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் இதற்கான டிக்கெட் விற்பனையும் தற்பொழுது துவங்கி இருக்கிறது மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகின்ற 22 ஆம் தேதி பிற்பகல் ஒன்றரை மணி அளவில் தொடங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தற்பொழுது தொடங்கி இருக்கிறது.


1500 முதல் 10 ஆயிரம் வரை டிக்கெட் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆன்லைனில் மட்டுமல்லாது நேரடியாக ஸ்டேடியத்திலும் தற்பொழுது டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. நேற்று டிக்கெட் கவுண்டர் 11 மணி அளவில் விற்பனை தொடங்கிய நிலையில் அதிர்ச்சமாக ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. மழை பெய்ந்தாலும் அதை பொருட்படுத்தாமல் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் குவிந்து இருந்தார்கள்.


டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் பல்வேறு ராசிகள் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். சில மணி நேரங்களில் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள ஸ்டேடியத்தில் 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Input &Image courtesy: Dinamalar

Tags:    

Similar News