திருவனந்தபுரத்தில் சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர்கள்: போட்டோ வைரல்!

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Update: 2023-01-15 08:34 GMT

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தை இந்தியா கேரளாவில் உள்ள மைதானத்தில் எதிர்கொள்கிறது. இன்று ஆட்டம் பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழுவாக நின்று கேரளாவில் புகைப்படத்தை எடுத்து தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள். அந்த ஒரு புகைப்படம் தான் தற்பொழுது வைரலாக இருக்கிறது. குறிப்பாக அவர் கேரளாவில் குழுவாக சென்று சுவாமி தரிசனம் செய்து பிறகு அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்கள்.


மேலும் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இதில் இந்திய, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று கேரளாவில் நடக்க இருக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த ஒரு போட்டி ஒளிபரப்பாகி வருகிறது . மேலும் இதற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கேரளாவுக்கு வந்திருக்கிறார்கள்.


கேரளா திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாத சுவாமி கோவிலில் தான் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சுவாமி தரிசனம் செய்து தற்பொழுது புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். கோவிலில் வெளியே இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழுவாக நின்று எடுத்த படம் தற்போது பல்வேறு லைக்களை குவித்து வருகிறது.

Input & Image courtesy:Maalaimalar


Tags:    

Similar News