ஒரே ஆண்டில் ஆயிரம் ரன் எடுத்து சூரியகுமார் சாதனை: ரோகித் சர்மா புகழாரம்!

ஒரே ஆண்டில் ஆயிரம் ரன் குவித்து சூரியகுமார் சாதனை படைத்து இருக்கிறார்.

Update: 2022-11-08 05:45 GMT

இந்திய கிரிக்கெட் வீரர் சூரியகுமார் இந்த ஆட்டத்தில் 37 ரன்கள் எடுத்த பொழுது நடப்பு ஆண்டில் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் கடந்து முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த ஆண்டில் இதுவரை 28 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், ஒன்பது அரை சதம் உள்ளிட்ட 1026 ரன்கள் குறித்து பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 924 ஆட்டங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.


மேலும் 20 ஓவர் போட்டியில் ஒரு ஒரே ஆண்டில் ஆயிரம் அறங்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் முகமது ரிஸ்வான் 1326 ரன்கள் எடுத்திருந்தார் வெற்றிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இது ஒரு முழுமையான ஆல் ரவுண்டு செயல்பாடு. இதை நான் நாங்கள் எதிர்பார்த்து, ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இந்த ஆடுகளத்தில் களம் இறங்கி விரும்பிய மாதிரி விளையாட வேண்டும் என்று நினைத்தோம். அதை செய்து இருக்கிறோம்.


சூரியகுமார் பேட்டிங் அற்புதம், அவர் இந்த மாதிரி அதிரடியாக விளையாடுவதை வெளியில் இருந்து பார்க்கும் பொழுது வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் நெருக்கடி தணிந்து விடுகிறது. அத்துடன் எதிர் முனையில் நிற்கும் பேட்ஸ் மணி அழுத்தத்தை குறைத்து விடுகிறார். அரை இறுதியில் இங்கிலாந்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறோம். அங்குள்ள சீதோசன நிலைக்கு ஏற்ப சீக்கிரம் மாற்றிக் கொள்வது முக்கியமானது. ஏற்கனவே அங்கு நாங்கள் விளையாடி இருக்கிறோம், ஆனாலும் அதற்கு ஏற்ப மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து ஒரு நல்ல அணி சிறந்த போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News