இவர் நிச்சயம் இந்தியாவிற்காக உலக கோப்பையை வெல்வார்: கருத்து கணிப்பு... யார் அந்த வீரர்?

சூர்யகுமார் யாதவ் இந்தியாவிற்காக நிச்சயம் உலக கோப்பையை வென்று கொடுப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கூறுகிறார்.

Update: 2023-04-08 14:16 GMT

இந்தியா தற்பொழுது ஐ.பி.எல் தொடர்களை முடித்துக் கொண்டு அடுத்ததாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டிருக்கும் முழு கவனம் செலுத்த இருக்கிறது. இந்தியா முழுவதும் பல்வேறு ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட்டை இந்தியா சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று ஒரு எண்ணத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முழுவதுமாக இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த ஒரு பேட்டியின் போது, இந்திய கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ், வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் எப்படி அதிரடியாக விளையாடுவார்? என்பதை நாங்கள் நன்கு அறிவோம். 


அவருக்கு ஒரு அணியை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் அவற்றை தொடர்ந்து ஒரு அணிக்கு எவ்வளவு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது நிச்சயமாக தெரியும். ஏனெனில் அவரைப் போன்ற வீரரால் உலக கோப்பையை வென்று கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவரது பேட்டிங் கொஞ்சம் சீரற்ற நிலையில் இருக்கலாம். ஆனால் முக்கியமான தருணங்களில் அவர் அசத்தக்கூடியவர் மறைந்த ஆன்ரூடு எப்படி ஆஸ்திரேலிய அணிக்காக செயல்பட்டாரோ?அதுபோல தற்போது இந்திய அணியில் சூர்ய குமார் விளங்குகிறார் என்று கூறியிருக்கிறார்.


மேலும் இதுவரை வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி அணியில் பங்களிப்பு தேவை என்ன என்பதை தெளிவாக சொல்லி புரிய வைக்கும் ஒவ்வொரு நபராக அவர் விளங்குகிறார். எனவே தனி நபர் ஆன அணிக்கு வெற்றியை தேடி தருவார் என்று அவர் பாராட்டி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

Input & Image courtesy:News

Tags:    

Similar News