பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் பவினா!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் இந்தியாவின் பவினா பென் பட்டேல் தற்போது வெள்ளிப்பதக்கம் வென்றார். நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல், சீன வீராங்கனை ஜாங்க் மியா மோதினார்.

Update: 2021-08-29 02:47 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் இந்தியாவின் பவினா பென் பட்டேல் தற்போது வெள்ளிப்பதக்கம் வென்றார். நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல், சீன வீராங்கனை ஜாங்க் மியா மோதினார்.

இந்த போட்டியில் பவினா படேல் 32 என்ற புள்ளிக் கணக்கில் ஜாங்க் மியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், இன்று இறுதி போட்டியில் சீனாவின் ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார் பவினா. இதனால் டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் இந்தியாவின் பவினா பென் பட்டேல் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai

https://www.puthiyathalaimurai.com/newsview/114141/Indian-Para-table-tennis-player-Bhavina-Patel-brings-home-silver-medal

Tags:    

Similar News