டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு - அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு - அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Update: 2020-12-25 17:39 GMT
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் பாஸிங்டே டெஸ்ட் போட்டி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. இந்திய அணியில் இருந்து பிரித்திவ் ஷா, வீராட் கோலி, விர்த்திமான் சாஹா மற்றும் முகமத் சமி ஆகியோர் முதல் போட்டியில் இருந்த வீரர்கள் இந்த இரண்டாவது போட்டியில் இடம்பெறவில்லை.

அவர்களுக்கு பதிலாக சுக்மன் கில், ரிஷப் பண்ட், ரவிந்திர ஜடேஜா, முகமத் சீராஜ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எதிர்பார்க்கப்பட்ட கே.எல் ராகுல் அணியில் இடம்பெறவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்: மாயங்க் அகர்வால், சுக்மன் கில், புஜாரா, ரஹானே, பண்ட், ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, சீராஜ். 

Similar News