பாராலிம்பிக்: உயரம் தாண்டும் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றார் மாரியப்பன்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலம் வென்றுள்ளார்.

Update: 2021-08-31 13:07 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலம் வென்றுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர் மாரியப்பன் தங்கவேலு. இவர் தமிழ்நாடு சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், தற்போது ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு இந்தியாவில் உள்ள அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் டி63 பிரிவில் இந்த பதக்கத்தை அவர் வென்றுள்ளார். அமெரிக்க வீரர் சாம் க்ரிவ் இந்த பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

Source: Puthiyathalamurai

Image Courtesy:Newstm

https://www.puthiyathalaimurai.com/newsview/114405/Indian-won-two-medals-in-High-Jump-Tokyo-Paralympics-2020-and-Tamil-Nadu-Para-Athlete-Mariyappan-Thangavelu-won-Silver-Medal-and-in-2016-Rio-Paralympics-he-won-Gold-Medal-in-the-Same-event

Tags:    

Similar News