மொகாலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை 174 ரன்னில் சுருண்டது!

இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், நிசாங்கா ஒருபுறம் நிலைத்து நின்றாலும், மறுபக்கத்தில் விக்கெட் அடுத்தடுத்து விழுந்தது. அதன்படி இலங்கை அணி 174 ரன்னில் சுருண்டது.

Update: 2022-03-06 10:12 GMT

இந்தியா, இலங்கை அணிகளுக்கான இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஜடேஜா 175 ரன்களும், ரிஷாப் பண்ட் 96 ரன்களையும் எடுதனர். இதன் காரணமாக இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்களுடன் டிக்ளேர் செய்தது.

அதனை தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் விளையாட தொடங்கியது. நேற்று இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. நிசாங்கா 26 ரன்களுடனும், அசலாங்கா 1 ரன்னுடனும் களம் கண்டனர்.

மேலும், இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், நிசாங்கா ஒருபுறம் நிலைத்து நின்றாலும், மறுபக்கத்தில் விக்கெட் அடுத்தடுத்து விழுந்தது. அதன்படி இலங்கை அணி 174 ரன்னில் சுருண்டது.

Source: Maalaimalar

Image Courtesy: CricketTimes.Com

Tags:    

Similar News