இஷான் கிஷானை பாராட்டிய ரோகித் சர்மா!

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் போட்டி நேற்று (பிப்ரவரி 24) லக்னோவில் தொடங்கியது.

Update: 2022-02-25 11:40 GMT

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் போட்டி நேற்று (பிப்ரவரி 24) லக்னோவில் தொடங்கியது. முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவின்போது 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. இஷான்கிஷன் 89 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 57 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 44 ரன்களை எடுத்திருந்தனர்.

அவர்களை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியை பொறுத்தவரையில் அசலங்கா 53 ரன் எடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்திய அணி வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்; இஷான் கிஷனின் மன நிலையும், திறமையும் நன்கு அறிந்துள்ளேன். அவர் பேட்டிங் செய்வதை பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார். எனவேதான் அவரை முன்னரே பேட்டிங் செய்ய அனுப்பியிருந்தோம் என்று பாராட்டினார்.

Source: Maalaimalar

Image Courtesy: Sportskeeda

Tags:    

Similar News