ஐ.பி.எல் ஏலம்: அஸ்வின், ராகுல், ரெய்னாவை எடுப்பதற்கு புதிய அணிகள் போட்டி!

இந்த மாத கடைசியில் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் விடப்படும் நிலையில், ராகுல், அஸ்வின், ரெய்னாவை எடுப்பதற்கு புதிய அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றது.

Update: 2021-12-11 10:11 GMT

இந்த மாத கடைசியில் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் விடப்படும் நிலையில், ராகுல், அஸ்வின், ரெய்னாவை எடுப்பதற்கு புதிய அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றது.

15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிதாக லக்னோ, அகமதாபாத் உள்ளிட்ட அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றது.

இந்த விளையாட்டுக்காக ஏற்கனவே உள்ள 8 அணிகளும் மொத்தம் 27 வீரர்களை தக்க வைத்துள்ளது. இதனிடையே புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் உள்ளிட்ட அணிகள் தலா 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

Source: Maalaimalar

Image Courtesy:The Indian Express


Tags:    

Similar News