மெதுவாக பந்துவீசியதால் டெல்லி அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

Update: 2022-04-08 10:18 GMT

லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்ரல் 7) ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதால் டெல்லி கேப்டன் ரிஷப்பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: லக்னோவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி மெதுவாக ஓவர் வீதத்தை பராமரிக்காததால் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் நடத்தை விதிகளின்படி இந்த சீசனில் டெல்லி அணியின் முதல் தவறாக இவை இருப்பதால் கேப்டன் ரிஷப்பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: Aaj Tak

Tags:    

Similar News