ஐ.பி.எல். ஏலம்: 18 வீரர்களுக்கு ரூ.90 கோடியை செலவு செய்த லக்னோ அணி!

15வது ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் கடந்த சில நாட்களுக்கு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இந்தியர்கள் 337 உட்பட 600 வீரர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-02-14 14:18 GMT

15வது ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் கடந்த சில நாட்களுக்கு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இந்தியர்கள் 337 உட்பட 600 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடந்த ஏலத்தில் 204 வீரர்கள் ரூ.551.7 கோடிக்கு எடுக்கப்பட்டனர். 137 இந்திய வீரர்கள் அடங்குவர். மீதம் 67 பேர் வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். மீதம் 97 வீரர்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சீசனில் ஒவ்வொரு அணியும் 90 கோடி ரூபாய் அளவிற்கு ஏலத்தில் பங்கேற்க வேண்டிய தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் புதிதாக இணைந்த லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணி மட்டுமே ரூ.90 கோடியை முழுவதும் பயன்படுத்தி 18 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News