IPL கிரிக்கெட் தொடர்: வெற்றி வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது நான்காவது வெற்றியை அடைந்து பட்டியலில் முன்னணியில் இருக்கிறது.

Update: 2023-04-23 05:28 GMT

IPL கிரிக்கெட் தொடர் தொடங்கி சிறப்பாக ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் தன்னுடைய நான்காவது வெற்றியை கைப்பற்றி இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்ற 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னை ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.


குறிப்பாக சி.எஸ்.கே ஆட்டத்தில் மிகவும் சிறப்பாக வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது. ஆட்டத்தில் முன்னணியில் மூன்று அணிகள் முன்னணியில் இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை லக்னோ ராஜஸ்தான் ஆகிய அணிகள் நான்கு வெற்றிகளையும் இரண்டு தோல்விகளையும் பெற்று முன்னணியில் இருக்கிறது. எனவே இந்த ஐ.பி.எல் தொடரை யார் கைப்பற்றுவார் என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் பெருமளவில் இருந்து வருகிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி கொண்டாட்டங்கள் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ரசிகர்கள் மட்டுமல்லது ரசிகைகளும் பெரும் அளவில் ஆட்டத்தில் தங்களுடைய முழு ஈடுபாட்டையும் காட்டு ஜெயிக்க வேண்டும் என்ற ஒரு உற்சாகத்தில் ஸ்டேடியத்தில் மும்மரமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News