தோனி போன்ற கேப்டனை இனி பார்க்க முடியாது.. முன்னாள் கேப்டன் கருத்து!

தோனி போன்ற ஒரு கேப்டனை இனி பார்க்க முடியாது.

Update: 2023-04-19 00:45 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியின் போது இது பற்றி அவர் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் நன்றாக விளையாடுவதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பது நன்றாக தெரியும். டோனியின் தலைமையின் கீழ் மட்டுமே இது சாத்தியமாகும்.


200 ஆட்டங்களுக்கு தலைமை தாங்கி இருப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இவ்வளவு போட்டிகளில் கேப்டனாக இருப்பது ஒரு சுமையாகும். அது அவரது ஆட்டத்திறமையை பாதிக்கும். டோனி சற்று வித்தியாசமான கேப்டன் அவரைப் போன்று கேப்டன் யாரும் இருந்தது கிடையாது, வருங்காலத்திலும் அவரைப் போன்ற ஒரு கேப்டனை பார்க்க முடியுமா என்று எனக்குள் அடிக்கடி சந்திக்க வரும் என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.


பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி 226 ரன்களை கொடுத்து இருக்கிறது. IPL வரலாற்றில் சென்னை அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தது இது 25வது நிகழ்வாகும். அதிக முறை 200க்கும் மேல் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அந்த வகையில் இரண்டாவது இடத்தில் பெங்களூரு ராயல்ஸ், மூன்றாவது இடத்தில் பஞ்சாப் இருந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை தரப்பில் 17 சிக்ஸர், பெங்களூரு சார்பில் 16 என முப்பத்தி மூன்று சிக்ஸர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News