ஐ.பி.எல். விதிமீறல்: நிதிஷ் ராணாவுக்கு, பும்ராவுக்கு என்ன தண்டனை தெரியுமா?

Update: 2022-04-07 07:34 GMT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது சீசன் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக போட்டி அனைத்தும் மும்பை மைதானங்களில் நடைபெற்று வருகிறது. அதே போன்று நேற்று (ஏப்ரல் 6) நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடியது. இதில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இப்போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணாவுக்கு அபராதமாக சம்பளத்தில் 10 சதவீதமும், மும்பை அணியின் வீரர் பும்ராவுக்கும் எச்சரிக்கையும் செய்யப்பட்டது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News