முதல் டி-20 போட்டியில் அசத்திய ஜடேஜா டி-20 தொடரில் இருந்து விலகல்.!
முதல் டி-20 போட்டியில் அசத்திய ஜடேஜா டி-20 தொடரில் இருந்து விலகல்.!
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான முதல் டி.20 போட்இன்நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கே.எல் ராகுல் 51 ரன்களும், ஜடேஜா 44 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிஆர்கி ஷாட் 34 ரன்களும், ஆரோன் பின்ச் 35 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும், பின்வரிசையில் களமிறங்கிய ஹென்ரிக்ஸை (30) தவிர மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.
இந்நிலையில் முதல் டி-20 போட்டியில் அசத்திய ரவிந்திர ஜடேஜா முதல் போட்டியில் கடைசி ஒவரில் தலையில் அடிப்பட்டதால் ஆஸ்திரேலியா பேட்டிங்கின் போது களம் இறங்கவில்லை. இந்நிலையில் மீதமுள்ள இரண்டு டி-20 போட்டிகளிலும் இருந்தும் ரவிந்திர ஜடேஜா விலகி உள்ளார். இது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகின்றது. அவருக்கு பதிலாக ஷர்துல் தாகுர் அணியில் இணைந்துள்ளார்.