ஒலிம்பிக்கில் பங்கேற்கும் காவலர்.. 30 ஆண்டுகால பகையை மறந்து பேனர் வைத்து அசத்திய கிராமங்கள்.!

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்களில் ஒருவரான நாகநாதன் பாண்டிக்கு, வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Update: 2021-07-12 13:44 GMT

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்களில் ஒருவரான நாகநாதன் பாண்டிக்கு, வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ளது சிங்கப்புலியா பட்டி என்ற கிராமர். அந்த கிராமத்தில் ஆங்காங்கே பேனர் வைக்கப்பட்டுள்ளன. இதே போன்று வெள்ளையாபுரம் என்ற பக்கத்து கிராமத்திலும் வாழ்த்து தெரிவித்து, பேனர் வைக்கப்பட்டுள்ளது. 


சிங்கப்புலியா பட்டிக்கும், வெள்ளையாபுரத்திற்கும் இடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த பகை மறந்து, தேசத்திற்காக இரண்டு கிராம மக்களும் இணைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News