கில், விராட் கோலி டக் அவுட் ஆக நிலைத்து விளையாடி இந்திய அணியை மீட்டெடுத்த ரோஹித் சர்மா!

கில், விராட் கோலி டக் அவுட் ஆக நிலைத்து விளையாடி இந்திய அணியை மீட்டெடுத்த ரோஹித் சர்மா!

Update: 2021-02-13 18:54 GMT

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.  முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்ற நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது‌. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் சுக்மன் கில் டக்அவுட் ஆக இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. இருப்பினும் மறுமுனையில் ரோஹித் சர்மா நிலைத்து விளையாடி கொண்டிருந்தார். வழக்கமாக ரோஹித் சர்மா முதல் விக்கெட்டை இழப்பது இந்த தொடரில் இருந்து வந்த நிலையில் இந்த போட்டியில் ரோஹித் சர்மா நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி விக்கெட்டை இழக்காமல் விளையாடினார்.

அரைசதம் வீளாசிய ரோஹித் சர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி சதம் வீளாசினார். இந்திய அணி மோசமான நிலைக்கு சென்று நிலையில் ரோஹித் சர்மாவின் நிலையான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலைக்கு முன்னேறியது.தொடந்து விளையாடிய ரோஹித் சர்மா 150 ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து சிறப்பாக பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்த ரஹானே அரைசதம் வீளாச இந்திய அணி தேனீர் இடைவேளியில் 248/3 என்ற நிலையில் இருந்தது.

Similar News