ஐ.பி.எல்., போட்டிகளில் இருந்து மும்பை இன்டியன்ஸ் அணி நட்சத்திர பவுலர் மாலிங்கா ஓய்வு அறிவிப்பு.!

ஐ.பி.எல்., போட்டிகளில் இருந்து மும்பை இன்டியன்ஸ் அணி நட்சத்திர பவுலர் மாலிங்கா ஓய்வு அறிவிப்பு.!

Update: 2021-01-21 16:22 GMT

ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் இருந்து வீரர்களை தக்கவைக்கவும் விடுக்கவும் ஐபிஎல் நீர்வாகம் கால அவகசம் கொடுக்கப்பட்ட நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் அணி முக்கிய வீரர்களை தக்கவைத்து கொண்டனர்.

மும்பை இன்டியன்ஸ் அணியின் பாட்டர்சன், குல்டர் நைல், மாலிங்கா போன்ற முக்கிய வீரர்களையும் விடுவித்தது. இந்நிலையில் மும்பை அணியின் நட்சத்திர பவுலரான மாலிங்கா விடுத்த நிலையில் மாலிங்கா டி-20 லீக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மாலிங்கா ஏற்கனவே 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்காத நிலையில் இந்த ஐபிஎல் தொடர்களில் இருந்தே ஓய்வை அறிவித்துள்ளார். அதேபோல் சென்னை அணியில் ஹர்பஜன் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஹர்பஜன் சிங் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. சென்னை அணியில் ஏற்கனவே வாட்சன் ஓய்வை அறிவித்திருந்தார்.

அதே போல் இந்த ஐபிஎல் தொடரில் பெரிய வீரர்களும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித், பின்ச், மேக்ஸ்வேல் போன்ற வீரர்களும் விடுக்கப்பட்டுள்ளனர். சென்னை அணியிடம் 22.9 கோடி வைத்துள்ளது. 

Similar News