பழனி முருகனுக்கு மொட்டை அடித்த கிரிக்கெட் வீரர் நடராஜன்.!

பழனி முருகனுக்கு மொட்டை அடித்த கிரிக்கெட் வீரர் நடராஜன்.!

Update: 2021-01-30 14:18 GMT

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், பழனி முருகன் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ள அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய கிரிக்கெட் வீரருமான நடராஜன், பழனி மலை முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது தனது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக மொட்டை அடித்துள்ளார். அவர் மொட்டை அடிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் ஐபிஎல் மற்றும் இந்திய, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்கு பெயர் எடுத்துக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News