ஒலிம்பிக் குத்துச்சண்டை.. காலிறுதிக்கு முன்னேறி சென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா.!

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை 69 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை லவ்லினா போராகைன்.

Update: 2021-07-27 06:17 GMT

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை 69 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை லவ்லினா போராகைன்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றனர். 


அந்த வகையில் இந்தியா சார்பில் குத்துச்சண்டை 69 கிலோ பிரிவின் லீக் ஆட்டத்தில் ஜெர்மனியின் நாடின் அபட்ஸை இந்திய வீராங்கனை லவ்லினா இன்று எதிர்கொண்டார்.

இப்போட்டியில் நாடினை 3.2 கணக்கில் வீழ்த்தி லவ்லினா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் குத்துச்சண்டை 69 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதுமட்டுமின்றி காலியுறுதி போட்டியில் லவ்லினா வெற்றி பெற்றாலே இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுவிடும். இவரது வெற்றியை இந்திய மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Tags:    

Similar News