டோக்கியோவில் ஒரே நாளில் 2,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. ஒலிம்பிக் கிராமத்தில் பாதுகாப்பு தீவிரம்.!

கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நேரத்தில் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

Update: 2021-07-27 11:31 GMT

கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நேரத்தில் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இதனிடையே டோக்கியோ நகர் முழுவதும் தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் அந்நகரத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், டோக்கியோ நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டுள்ளது.


அது மட்டுமின்றி டோக்கியோ நகரில் இன்று ஒரே நாளில் 2,848 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தொற்று எண்ணிக்கை பதிவாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விளையாட்டு போட்டி நடைபெறும் கிராமத்தில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News