'உத்வேகமூட்டுபவர்' - ரூ.16 லட்சம் சம்பளத்தில் இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர்

Update: 2022-06-22 06:38 GMT

கால்பந்தை உலக அளவில் வளர்த்தெடுக்க இந்திய கால்பந்து அணிக்காக பிரத்யேகமாக ரூ.16 லட்சம் சம்பளத்தில் ஜோதிட நிறுவனம் ஒன்றை அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு நியமனம் செய்துள்ளது.

நடைபெற்று முடிந்த ஏ.எஃப்.சி. ஆசியக் கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடி ஆசியக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக ஜோதிடர்களின் உத்வேகமூட்டல் தான் என்று இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அணி நிர்வாகி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஆசியக் கோப்பை கால்பந்து குறித்து 'உத்வேகமூட்டுபவர்' நியமனம் செய்யப்பட்டுள்ளார். அது பின்னர்தான் தெரியவந்தது, அது ஜோதிட நிறுவனம் என்று. பயிற்சி மட்டும் வீரர்களுக்கு பத்தாது, அவர்களுக்கு ஜோதிடம் உத்வேகம் அளிக்கிறது. இதன் காரணமாகத்தான் ஜோதிட நிறுவனத்திடம் இந்திய கால்பந்தின் ஜாதகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News