ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

Update: 2022-04-03 08:02 GMT

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றும் வரும் நிலையில் தலா ஒரு போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று (ஏப்ரல் 2) நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்க செய்தது. அந்த அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் உட்பட தொடக்க வீரர்கள் இரண்டு பேரும் ரன்கள் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர். மேலும், 210 ரன்களுக்கு ஆஸ்திரேலியாக அணி ஆட்டமிழந்தது.

இதனையடுத்து 211 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 37.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Source: Maalaimalar

Image Courtesy:The Indian Express

Tags:    

Similar News