டி20 உலக கோப்பை: பாகிஸ்தான் வெற்றி! இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்!

பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும் எடுத்தனர். இதனை தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்கத்தில் பாபர் அசாம், மொகமது ரிஸ்வான் களம் இறங்கினர்.

Update: 2021-10-25 01:56 GMT

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று இரவு துபாயில் நடைபெற்றது. முதலின் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் இறங்கிய இந்திய அணி துவக்கத்தில் சற்று தடுமாறியது. விராட் கோலி, ரிஷப் பண்ட் இரண்டு பேரும் நிதானமாக ஆடினர். ரிஷப் பண்ட் 39 ரன்னில் அவுட் ஆனார். மிகவும் நிதானமாக விளையாடி விராட் கோலி 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.


பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும் எடுத்தனர். இதனை தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்கத்தில் பாபர் அசாம், மொகமது ரிஸ்வான் களம் இறங்கினர்.


இரண்டு பேரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். கிடைக்கும் பந்துகளை சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினர். இரண்டு பேரும் அரை சதத்தை தொட்டனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எப்படியும் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Source: Maalaimalar

Image Courtesy:ANI


Tags:    

Similar News