டி20 போட்டியில் பாகிஸ்தான் வென்றது முஸ்லீம்களுக்கு கிடைத்த வெற்றி: பாக்., அமைச்சர் சர்சை பேச்சு!

டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வென்றது முஸ்லீம்களுக்கு கிடைத்த வெற்றி என்று பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்.

Update: 2021-10-25 13:04 GMT

டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வென்றது முஸ்லீம்களுக்கு கிடைத்த வெற்றி என்று பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். துபாயில் நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது. இதனால் இந்திய ரசிகர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி பாகிஸ்தான் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் பல்வேறு நாடுகளில் கொண்டாடினர். இந்தியாவிலும் சில இடங்களில் முஸ்லீம்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது முஸ்லீம்களின் வெற்றி என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளையாடை விளையாட்டாக பார்க்காமல் முஸ்லீம்களின் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu


Tags:    

Similar News